Friday, September 17, 2010

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு சித்தமருத்துவம்

தோழர் தங்கராசு கேள்விகளுக்கு பதிலாக தகவல்கள் தரப்படுகிறது.

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி மற்றும்      காய்ச்சலுக்கு சித்தமருத்துவம்

வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும்போதும், குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போதும் பரவலாகவே நோய்கிருமி தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது.வைரசு மற்றும் பாக்ட்டீரிய நுண்கிருமிகளின் தொற்று இந்த காலங்களில் ஏற்படுகின்றது. இந்த காலங்களில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து இருப்பது மட்டுமின்றி, நுண்கிருமிகள் உடலில் தொற்ற ஏதுவான சூழ் நிலை உருவாகிறது.இதனால் சளி,இருமல்,சுரம் போன்ற நோய்கள் மனிதர்களுக்கு உண்டாகிறது.

 

ü    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளிக்கு சித்த மருத்துவம்

1.    1டம்ளர் பாலில்,1 தேக்கரண்டி மிளகு பொடி, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடியைச் சேர்த்து பனை வெல்லம் கலந்து சாப்பிடவும்.

2.    துளசி சாறு 60மி.லி சாப்பிடவும்.

3.    ஆடாதொடை சாறு 60மி.லி சிறிது தேன் கலந்து சாப்பிடவும்.

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்

 

1.    நிலவேம்பு கசாயமாக வைத்து சாப்பிட்டு வர 2வேளையில் குணம்தரும்.சிக்குன்குனியா,பன்றிக்காய்ச்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கும் நல்ல மருந்தாகும்.மேலும்,இவை வராமல் தடுப்பதற்கு முன்னெச்செரிக்கையாக கசாயத்தை குடிக்கலாம்.

2.    மிளகினை கசாயமாக வைத்து குடித்து வந்தலும் சுரம் குறையும்.

 

குறிப்பு:

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி,காய்ச்சலுக்கு தாளிசாதி சூரணம்,திரிகடுகு சூரணம்,வச்சிரகண்டி மாத்திரை,ஆடாதொடை மணப்பாகு,திப்பிலி ரசாயணம் போன்ற மருந்துகளை சித்தமருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ளவும்.

 

 

                                                                                         என்றும் அன்புடன்....

                                                                                            சித்த மருத்துவன்

                                                                                         ரெ.மாணிக்கவாசகம்


No comments:

Post a Comment