Sunday, September 26, 2010

குழந்தை பாக்கியம் தரும் - துரியன்



 குழந்தை பாக்கியம் தரும் - துரியன

குன்னூர் பர்லியார் தோட்டக்கலைப் பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் துரியன் பழ மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முதல் சீசன் துவங்கும். இப்பழங்கள் குழந்தை பாக்கியம் தரும் ஆற்றலை கொண்டது என நம்பப்படுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து துரியன் பழத்தை வாங்கி செல்கின்றனர். தற்போது, பர்லியார் பழப்பண்ணையில் உள்ள 33 மரங்களிலும் துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளன; இவற்றில் 13 மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் சுமார் 500 கிலோ பழங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Courtesy- DHINANMALAR.com

                                                                              என்றும் அன்புடன்,

                                                                                       சித்த மருத்துவன்

                                                                                     ரெ.மாணிக்கவாசகம்



                                                                                                       


No comments:

Post a Comment