Sunday, August 21, 2011

சித்தமருத்துவமும் நானோ தொழில் நுட்பமும்






சித்தமருத்துவமும் நானோ தொழில் நுட்பமும்

                இன்றைய நவீன உலகில், நானோ தொழில் நுட்பம் புரட்சி படைத்து கொண்டிருப்பது அறிந்ததே.தகவல் தொழில் நுட்பம் தொடங்கி,விண்வெளி ஆராய்ச்சி,மருத்துவ துறை என பல துறைகளிலும்,கோலோச்சி வருவதும் இயற்கை.

               பல அறிவியல் கருத்துகளையும் தன்னகத்தே கொண்ட,சித்த மருத்துவம் கூறுகிற நானோ தொழிழ் நுட்ப கருத்துகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
             இங்கு நானோ தொழில் நுட்பம் பற்றியும்,அதில் நடந்து வருகிற நவீன ஆராய்ச்சிகள் பற்றியும், நவீன நானோ தொழில் நுட்பத்தை விட சித்த மருத்துவ நானோ தொழில் நுட்பம் எங்ஙனம் மேலானது என்பது பற்றியும் தெளிவாக காண்போம்.

 நானோ தொழில் நுட்பம்-அறிமுகம்:
      நானோ = 10¯9(கிரேக்க வார்த்தை)
     மூலக்கூறுக்களின் அளவு 10¯9 விட குறைவான அளவினையுடைய பொருட்களின் அமைப்பு பற்றி விளக்கும் அறிவியல், நானோ தொழில் நுட்பம் எனப்படும்.



 நானோ மருத்துவம்:
         மூலக்கூறுக்களின் அளவு 10¯9 விட குறைவான அளவினையுடைய பொருட்களின் மருத்துவ கூறுகளை பற்றி விளக்கும் அறிவியல், நானோ மருத்துவம் எனப்படும். 


 நவீன நானோ தொழில் நுட்பம் – பயன்கள்:
       நானோ தொழில் நுட்பம்
 
நோய்களை கண்டறிதல்
மருந்து கூட்டு தயாரித்தல்
விரைந்து உடலில் மருந்து உட்கிரகித்தல்


ஆகிய வகைகளில் பயனளிக்கிறது.
நானோ தொழில் நுட்பம் – நவீன ஆராய்ச்சிகள்;

  •  
    1.நானோ கோல்ட் - (Nano Gold) - School of Medicine Sanfransico,வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் நானோ கோல்ட் புற்று நோய் செல்களை அறிந்து,அவற்றை அளிப்பதகாக கூறுகிறது.

    2.நானோ சில்வர் - (Nano Silver)-London Institute of Research and Developement  of Medicine,U.K. ,வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் நானோ சில்வர் மிகச் சிறந்த நுண்ணுயிர் கொல்லியாக கூறப்படுகிறது.

    நானோ சில்வர் மூலக்கூறுகளை கொண்டு நுண்ணுயிர் கொல்லி கண் துளி,பயன்பாட்டிலே உள்ள்து.

    நானோ சில்வர் மூலக்கூறுகளை கொண்டு உருவாக்கப்பட்ட, நுண்ணுயிர் கொல்லி வீடியோகான் வாசிங் கருவிகளை பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே.

     நானோ சிங்க்: (Nano Zinc) கிருமி நாசினியாக செயல்பட்டு,உடலில் வியர்வை துளியினால் உண்டாகும் கிருமி தொற்றினை  நீக்குவதாக ஆராய்ச்சி கூறுகின்றதே. 

சித்த மருத்துவத்தில் நானோதொழில் நுட்ப கருத்துகள்;


அணுவினை துளைத்து ஏழுகடலையும் புகுத்தி” என்ற ஒளவையின் பாடலும்,

அணுவின் வடிவத்தினை கூறித்து கூறும்

”மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரமாயினால்
ஆவியின் கூறு நூறாயிரந் தொன்றுமே..

திருமூலர் பாட்டு, நானோதொழில் நுட்பம் கூறித்த மிகச் சிறந்த கருத்து.

பசு மயிர்- 1/100/1000/10000 = 10-9 1 நானோ கூறு.

தமிழர்கள் பயன்படுத்திய மிக சிறிய அளவுகள்;

1. முக்கால்= ¾
2. அரை = ½
3. கால் = ¼
4. நாலுமா = 1/5
5. மும்மா முக்காணி = 3/16
6. மும்மா =3/20
7. அரைக்கா = 1/8
8. இருமா =1/10
9. மா = 1/16
10. முக்காணி = 3/80
11. அரைமா = 1/40
12. காணி = 1/80
13. அரைக்காணி = 1/160
14. முந்திரி = 1/320
15.கீழ்முக்கால் = 3/1280
16.கீழ்அரை = 1/640
17.கீழ்க்கால் =  1/1280
18.கீழ் நாலுமா = 1/ 1600
19. கீழ் மூன்று வீசம் = 3/5120
20. கீழரைக்கால் = 1/5120
21. கீழ் முக்காணி = 3/25600
22. கீழ் அரைமா = 1/12800
23. கீழ் காணி = 1/51,200
24. கீழ் முந்திரி = 1/1,02400
25. இம்மி = 1/10,75,200
26.அதிசாரம் = 1/18,38,400 

சித்தமருத்துவமும்  நானோ தொழில் நுட்ப ஒப்பீடு;

                   சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட பற்ப,
செந்தூர,சுண்ண,கட்டு,களங்கு மருந்துகளை,மிக்குறைந்த அளவில்,அனுபானம் மாற்றி வழங்கும் வேளையி பல நோய்களை குணப்படுத்துவது,அவற்றிலுள்ள நானோ கூறுகளே.அதிலும் குறிப்பாக தேரன் யமக வெண்பா முறையில் கூற்ப்பட்ட் அரைப்பு நாள்,வில்லை உலர்த்தல்,புட விபரம் வகையில் முடிந்த பற்ப,செந்த்தூரங்கள்,அனுபானம் மாற்றி வழங்கும் வேளையி பல நோய்களை குணப்படுத்துவது,அவற்றிலுள்ள நானோ கூறுகளின் தன்மை ஆகும்.
  
                எடுத்துகாட்டாக, தேரன் யமக வெண்பா முறையில் முடிந்த வெள்ளி பற்பத்தினுடைய அளவு,காக்கை மூக்கின் நுனியில் 1/6 கூறப்பட்டுள்ளது.இது நிச்சயம் நானோ அளவினை விட சிறிய அளவில் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லையே. 


தேரன் முறையில் முடிந்த மருந்துகள்     அளவுகள்


1. எக்கு பற்பம்  = 1/4கடலை
2. வங்க பற்பம்  = 1/4கடலை
3.பலகரை பற்பம் = 1/4கடலை
4.அப்பிரக பற்பம் = 1/5 கடலை
5.காந்த பற்பம்= ¼ துவரை 
6.வெள்வங்க பற்பம் = ¼ துவரை
7.இலிங்க பற்பம் = 1/8 துவரை 
8.உப்பு பற்பம் = ¼ துவரை
9.இரச பற்பம் = 1 துவரை
10.அய பற்பம் = 1 சாமை
11.செம்பு பற்பம் = ¼ கடுகு
12.நாக பற்பம் = 1/6 அவரை
13.தங்க பற்பம் = 1/6 அவரை
14.தாளக பற்பம் = 1/8 ஓமம்
15.பவள பற்பம் = 1 மிளகு
16.முத்து பற்பம் = 1/6 அவரை
17.சங்கு பற்பம்  = ¼ அவரை
18 கந்தக பற்பம் = 1/8 துவரை

 

               இன்று உலக அளவில் பேசப்படும் நானோ நஞ்சு பற்றியும் நம் சித்தர்கள் விட்டு வைக்கவில்லை,என்பதை கடுகின் 1/4 கூறு நோய் நீக்கும் அரும் மருந்து- உத்தமம், 1கடுகு நச்சு-அதமம் என்பதே மிகச்சிறந்த எடுத்துகாட்டாகுமாம்

               உலக சுகாதர நிறுவன ( W.H.O ) வலியுறுத்தல்படி,ஒவ்வொரு உலோக,உபரச,பாடாண வகைகளுக்கும் அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

1. ஆர்சனிக் – 5 P.P.M
2. குரோமியம் – 5 P.P.M
3. வெள்ளி - 5 P.P.M
4. ஈயம்  – 5 P.P.M
5. பேரியம் – 100 P.P.M
6.பாதரசம் – 0.2 P.P.M
7.காட்மியம் – 1 P.P.M

(W.H.O.Standard for Metals in Food and Water)

              சித்த மருந்துகள், நச்சு தன்மை உடையவை என்ற தவறான கருத்து உலக முழுவதிலும் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக உலோக,உபரச,பாடாண வகைகள்,பாதுகாப்பு அற்றவை என்ற கருத்துகளும்  நிலவி வருகிறது.சித்த மருந்துகளை மிக மிக குறைந்த அளவில் வழங்கம் போது( நானோ அளவு குறைவாக) விரைவில் உட்கிரக்கிக்கப்பட்டு,மருந்து தன்மை விரவில் செயலாற்றும் என்பதும்,அவை நச்சுத்தன்மை அற்ற பாதுகாப்பான மருந்துகள் என்பதும் நானோ தொழில் நுட்ப மூலம் ஆய்வுகள்,இனி வரும் காலத்தில் நிரூபிக்கப்படும் என்பது உண்மை.

நவீன நானோ மருத்துவத்தை சித்த மருத்துவம் ஏன் சிறந்தது.

நவீன நானோ மருத்துவத்தில்,கருவிகளின் துணை கொண்டு நானோ மூலக்கூறுகளாக மாற்றுகின்றனர்.

சித்த மருத்துவத்தில்

1.கல்வத்தில் மூலிகை சாறு கொண்டு,மருந்தாக முடிக்க படுகிறது.அவ்வாறு,முடிக்கும் போது,அந்த மூலிகை சாறுகளின் மருந்து தன்மையும் கூடுதலாக கிடைக்கும்.

2.வில்லை வெப்பத்தில் உலர்த்த்ல்,வரட்டி புடம் இது போன்ற மருந்து செய்முறை பக்குவத்தால், முடிந்த மருந்துகளின் மருந்துத்தன்மை அதிககரிக்கிறது.

3.அனுபானம் மாற்றி வழங்கும்போது,ஒரே மருந்து பல நோய்களை போக்குவது சிறப்பு.

இத்தகைய சிறப்புகளால்,சித்த மருத்துவ மே, நவீன நானோ மருத்துவத்தை விட ஒருபடி மேலானது என்பதை உணர்த்தும்.

முடிவுரை:

சித்த மருத்துவம் அனைத்தும் முடிந்த முடிவு,அதை ஆய்வு செய்து நிரூபிக்க அவசியம் இல்லை.சரியான் முறையில் மருந்துகளை முடித்து,பயிற்சி செய்தலே போதுமானது.இது அடிப்படை வாதிகளின் வாதம்.

சித்த மருந்துகளின் சிறப்பினை நவீன அறிவியல் கொண்டு நிரூபிக்க வேண்டும்.இது நவீன் சித்த மருத்துவ சிந்தனையாளர்களின் வாதம்.

சித்த மருத்துவத்தின் சிறப்பு நானோ தொழில் நுட்பத்தின் மூலம்,அதன் தனித்தன்மை மாறாது நிரூபிக்கப்படும்போது,இரு தரப்பினரின் வாதமுமும் நிரூபிக்கப்பட்ட்டு,சித்த மருத்துவம் உலகின் தலைமை  மருத்துவமாக வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.. 




 







Wednesday, July 27, 2011

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்


சித்த மருந்துகளின் பரிசோதனைகள்

1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை:
விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும்.
2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை:
 சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும்
3.வங்க பற்ப சோதனை:
வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
4. நாக பற்ப சோதனை:
நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
5.வெள்ளி பற்ப சோதனை:
வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
6.தங்க பற்ப சோதனை:
·         தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது
7. தாம்பிர பற்ப சோதனை;
·         தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும்.

8.அயச்செந்தூர சோதனை:
 அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது.
9.அப்பிரக சோதனை
·         அதில் தளுக்கு இருக்க கூடாது.
·         விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது.
10.மிருதார் சிங்கி பற்ப சோதனை:
இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது

Wednesday, October 6, 2010

மூலிகைகளின் காரணப் பெயர்கள்

     மூலிகைகளின் காரணப் பெயர்கள்;

1.பொண்ணாங்காணி=பொன்+ஆம்+காண்+ நீ

2.கரிசலாங்காணி=கரிசல்+ ஆம்+காண்+ நீ

3.சீரகம்=சீர்+அகம்

4.கண்டங்கத்திரி= கண்டம்+கத்திரி

5.ஆடாதொடை இலை=ஆடு+தொடா+இலை

6.ஆடுதீண்டாபாளை=ஆடு+தீண்டா+பாளை

7.அகத்தி=அகம்+தீ

8.வெந்தயம்= வெந்த+அயம்(இரும்பு)

9.ஆடையொட்டி=ஆடை+ஒட்டி

10.எலிக்காதிலை=எலிக்காது+இலை

11.குதிரைக்குளம்படி=குதிரை+குளம்பு(கால் அடி)

12.முசக்காதிலை=முயல்+காது+இலை

13.முசுமுசுக்கை=முசு(குரங்கு)+முசு+கை-

                       இரு குரங்கின் கை

14.முடக்கறுத்தான்=முடக்கு+அறுத்தான்

15.வாத மடக்கி = வாதம்+அடக்கி

16.அசுவகந்தம் = அசுவம்(குதிரை)+கந்தம்(நாற்றம்)

Sunday, September 26, 2010

குழந்தை பாக்கியம் தரும் - துரியன்



 குழந்தை பாக்கியம் தரும் - துரியன

குன்னூர் பர்லியார் தோட்டக்கலைப் பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் துரியன் பழ மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முதல் சீசன் துவங்கும். இப்பழங்கள் குழந்தை பாக்கியம் தரும் ஆற்றலை கொண்டது என நம்பப்படுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து துரியன் பழத்தை வாங்கி செல்கின்றனர். தற்போது, பர்லியார் பழப்பண்ணையில் உள்ள 33 மரங்களிலும் துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளன; இவற்றில் 13 மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் சுமார் 500 கிலோ பழங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Courtesy- DHINANMALAR.com

                                                                              என்றும் அன்புடன்,

                                                                                       சித்த மருத்துவன்

                                                                                     ரெ.மாணிக்கவாசகம்



                                                                                                       


Monday, September 20, 2010

மருத்துவ பழமொழிகள்

      மருத்துவ பழமொழிகள்

1.ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன்-ஆயிரம் வேரை கொன்றால் அரை வைத்தியன் என்பதே உண்மையான பழமொழி.சித்த மருத்துவ துறையினுள் நிபுணராவதற்கு குறைந்ததே,ஆயிரம் மூலிகை வேர்களையவது மருந்து செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டியதை உணர்த்தவே,மேற்கண்ட பழமொழி.

2.ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்-ஆன்மீக அடிப்படையாக தெரிந்தாலும்,மகப்பேறு இல்லாத மகளிர்களுக்கு சொல்லப்படும் இந்த பழமொழி.ஆலமரக் கொழுந்து,மகளிருடைய கருப்பையில் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்க்க் கூடியது. ஆலமரக் கொழுந்தை பாலில் அரைத்து சாப்பிட,பெண்களுக்கு கருப்பைக் குற்றம் நீங்கி,குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே பழமொழி.

3.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்-மிளகு உணவில உள்ள நச்சுத் தன்மையை போக்குவதில் சிறந்த்து. நமக்கு பிடிக்காத பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவாக இருந்தாலும்,உணவிலுள்ள நச்சுகளை போக்கும் என்பதே பழமொழி.

4.ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்- அதிவிடயம் என்ற மூலிகை கழிச்சலுக்கு சிற ந்த்தது.பொங்கி வரும் ஆற்று நீரை எவ்வாறு அணை கட்டி நிறுத்துகிறோமோ,அதுபோல மிகுதியாக வரும் கழிச்சல் நோய்களை அதிவிடயம் நிறுத்தி பயன்தரும் என்பதே பழமொழியின் பொருள்.

5.அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்-கழுதை பாலை, குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு சமமாக கொடுகக்லாம்.தாய்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும்,கழுதைப்பாலில் உள்ளது.


                                                                       என்றும் அன்புடன்,

                                                                                              சித்த மருத்துவன்

                                                                                             ரெ.மாணிக்கவாசகம்

Saturday, September 18, 2010

முருங்கையின் மருத்துவ பயன்கள்;


  

தோழர்! ராம் குமார் கேள்விகளுக்கு பதிலாக கட்டுரை தரப்படுகிறது.

முருங்கையின் மருத்துவ பயன்கள்;


 

முருங்கையின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பிஞ்சு,பிசின் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளது.

 

முருங்கை இலை:

            வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை- இது பழமொழி.முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

 

முருங்கை இலையின் சத்துப்பொருட்கள்;




ü      இதில்,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு

ü      கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு

ü      பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு

ü      வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு

ü      ஷ்பைனக் கீரையில் உள்ள இரும்பு அளவை விட,3 மடங்கு

ü      பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு

இத்துனை,சத்துப்பொருட்களைக் கொண்டுள்ளது.

 

 குறிப்பு: சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

 

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்:

1.முருங்கை இலையோடு,2திரி பூண்டு,மஞ்சள்,உப்பு,மிளகு சேர்த்தரைத்து உண்ண நாய்க்கடி தீருகிறது

2.இலைச்சாறு கண்ணில் விட,கண்வலி தீரும்.

3.இலைச்சாற்றில்,சிறிது வெடியுப்பு சேர்த்துத் தர,சிறு நீர் பெறுகும்.

4.இலைச்சாறு+மிளகு சேர்த்து தலைவலிக்கு நெற்றியில் பற்றிட தீர்கிறது.

5.இலைச்சாறை பூசினால் வீக்கம் குறையும்.

இலைச்சாறை நாட்பட்ட புண்களுக்கு பூச விரைவில் ஆறி விடும்.

 

 முருங்கைப்பூவின் மருத்துவ பயன்கள்;




         முருங்கைப்பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட,உடல் வன்மை,ஆண்மை பெருக்கும் உண்டாகும்.

 

                     

முருங்கை பிஞ்சின் மருத்துவ பயன்கள்:



என்பு வெப்பம்,என்பு சுரம்,தாது நட்டம்,சுவையின்மை தீரும். வெப்பத்தை தணித்து ஆண்மையை தரும்.

 

முருங்கை காயின் மருத்துவ பயன்கள்:


 

ஆண்மையை தரும்.உடலுக்கு ஊட்டச்சத்தினை தருகிறது.

RECENT RESEARCHES IN MORINGA PLANT.

1. Moringa has been shown in studies to have an anti-tumor capacity. Moringa contains benzyl isothiocyanate. There are many studies that have shown this chemical and compounds derived thereof to have anti-cancer and chemoprotective capabilities. This chemoprotective aspect is critical for those who are battling cancer; this helps strengthen cells so that they can tolerate chemotherapy. 

 

                  2.The research found that the Moringa leaves posses substances that have antinociceptive and anti-inflammatory activities, in fact they found that it has high quantities of this substances. This means that Moringa Oleifera use in Indian traditional medicine as a treatment of ailments, particularly those related to pain and inflammation was just.

 3. Moringa Oleifera to treat and manage the symptoms of diabetes for years.

 

 4. f or many centuries Moringa Oleifera was used in traditional medicine, as a treatment Arthritis and Gout. It was believed that Moringa Leaf Powder reduce inflammations and pain caused by these conditions   


                                                               என்றும் அன்புடன்...

                                                              சித்த மருத்துவன்

                                                            ரெ.மாணிக்கவாசகம்